Monday 22 October 2012

பாரதீஸ்வரி... பாபநாசினி...

பாரதீஸ்வரி... பாபநாசினி
பாரதமெனும் ஞானக்கோயில் ஞானாம்பிகை நீ
பாரதீஸ்வரி... பாபநாசினி

குமரி முனை தவம் செய்யும் பகவதி நீயே
காஷ்மீரப் பனிமலையை காக்கும் வைஷ்ணவி
ஷ்ருங்க பீட சங்கரரின் சாரதை நீயே
காளிகட்ட ராமகிருஷ்ண பவதாரினியே..                (பாரதீஸ்வரி... பாபநாசினி)

நஞ்சை உண்ட கண்டன்தந்த பாகீரதி நீ
கொஞ்சு தமிழ்க் குறுமுனிவன் காவிரியும் நீ
காளிங்க நர்த்தனன் ஸ்ரீ கண்ணன் யமுனை நீ
வேள்வி கண்ட வேதபூமி தந்த சிந்து நீயே              (பாரதீஸ்வரி... பாபநாசினி)

வான்மறை திருக்குறள்தந்த வள்ளுவன் நீயே
வேதம் நான்கு மாபாரத வியாசனும் நீயே
சிலம்பிசைத்த சேரன் தம்பி இளங்கோவும் நீயே
கம்பன் காளிதாசன் கவி பாரதியும் நீயே                 
(பாரதீஸ்வரி... பாபநாசினி)

அருந்ததி அனசூயா சதி திரவ்பதி நீயே
சீதை கண்ணகி அன்னை சாரதாவும் நீயே
'வையத்து வாழ்வீர்காள்' ஆண்டாலும் நீயே
மீராப்பிரபு கிரிதாரி மீராபாயும் நீயே                        
(பாரதீஸ்வரி... பாபநாசினி)

திலகர் வீர சாவர்க்கர் நேதாஜியும் நீயே
வீரன் வாஞ்சி குமரன் பகத்சிம்மனும் நீயே
தாய்நாட்டின் திருத்தொண்டே தேவபூஜை என்று
வாழ்ந்த டாக்டர் ஹெட்கேவார் குருஜியும் நீயே    
(பாரதீஸ்வரி... பாபநாசினி)

அம்மையும் நீ அப்பனும் நீ அன்னபூரணி
அகில லோக நாயகி எமை ஆண்டிடுவாய் நீ
ஜகத் ஜனனி ஜகந் நாயகி சர்வேஸ்வரி நீயே
அகண்ட பாரதம் காண ஆசி அளி தாயே                 
(பாரதீஸ்வரி... பாபநாசினி)